வியாழன், ஆகஸ்ட் 25, 2011

கனவுகளை சுமக்கும் அவள்....

அவள்...
வறுமையின் வயிற்றில்
தரித்தவள்..

அவளின் ஆசைகள்
நிச்சயமான ஆசைகள் அல்ல..
நிராசைகள் என்று
நிச்சயிக்கப்பட்ட ஆசைகள்...

அவள் விழிகளின்
ஓரம் கசியும் கண்ணீர்த்துளி -
ஓரங்கட்டப்பட்ட அவள்
எண்ணங்களின் எதிரொலி...

ஒவ்வொரு நாளும்
காலாவதியான ஒரு
கனவுடன் கண் விழிக்கிறாள்...

கனவுகளில் கூட
கருப்பு வெள்ளை தான்..
தினமும் அவள்
கனவுகள் சுமக்கிறாள் தான்..
அனால் கனவுகளுக்கு தான்
அவளை சுமக்க பிடிக்கவில்லை..

அடிக்கடி நடக்கும்
அவள் தோழிகளின்
ஆடம்பரக் கலந்துரையாடல்களில்
அவள் மௌனியாகிறாள்...

அவளின் வற்றிப் போன
வாழ்க்கைப் பாதையில்
வசந்தத்தின் சுவடுகள் - எப்போதும்
கானல் நீர் தான்...

-இன்ஷிராஹ் இக்பால்-

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

தொடரும் தண்டனைகள்...




உன்னைத் தண்டிக்க
நினைத்து நிறுத்தி வைத்தேன்
எனது தொலைபேசியை..
தண்டிக்கப் படுவது
நான் தான் என்று புரியாமல்..

உன்னுடன் கோவிக்கும்
ஒவ்வொரு முறையும்,
தண்டனை தந்து
இரட்டிப்பாக
வலியை அனுபவிப்பது
நான் தானே..

நான் ஆன் பண்ணி
அடுத்த நொடியே
நீ ஆப் பண்ணி
எனக்கு இன்னுமொரு
தண்டனை தந்தாய்..
இல்லையில்லை..
நமக்கொரு தண்டனை..

அன்று காத்திருந்தேன்
ஒரு  Vibrate alert இற்காக..
இன்று காத்திருக்கிறேன்
SMS delivery report இற்காக..
என் காதலுடன்
காத்திருப்புகளும்
தண்டனைகளும்
தொடர்கின்றன..

மன்னித்து விடு என்னை...

(
யாவும் கற்பனை.. )