செவ்வாய், ஜூன் 14, 2011

முதல் பரீட்சை..!

முதல் பரீட்சை..!

இது எனக்கு முதல் பரீட்சை..!
தோல்வியைத் தழுவும் முதல் பரீட்சை..!
நான் எழுதிய
விஷப் பரீட்ஷையின்
விபரீத விளைவு இது..!

இது கேள்விப் பேப்பர் அல்ல..
தோல்விப் பேப்பர்..
தோற்பதற்கு விண்ணப்பம் வரைந்த
விடலைப் பெண் நான்..!

தொடு வானத்தை
தொட நினைக்கும்
ஒரு நட்சத்திரம் நான்..
தோல்வி என்று தெரிந்தும்
தொங்கிக் கொண்டு நிற்கிறேன் நான்..!
இல்லையென்றால்,
விடைத் தாள்கள் எனக்கு
க - விதைத் தாள்களாக மாறி இருக்குமா..?

நான் எழுதிய வெற்றுப் பேப்பர்...
இல்லையில்லை...
எழுதாமல் விட்டதனால் தானே
அது வெற்றுப் பேப்பர்..
அது என் மனதைப் போலவே
வெறுமையாய் இருக்கின்றது..

இது எனக்கு முதல் முறை..
துறை மாறி வந்ததால்
விழுந்த முதல் அறை..

கொடுப்பினை இல்லாததால்
இங்கு நான் வரவில்லை..
ஊழ்வினை எதுவும் இதன்
பின்னணியில் இல்லை..

வாய்ப்புக் கிடைக்காமல்
வாய் பிதற்றும் பட்டியலில் நானில்லை..
என் வாய்ப்புக்களை யாரும்
தட்டிப் பறிக்கவும் இல்லை...
அதை நான் யாருக்கும்
விட்டுக் கொடுக்கவும் இல்லை..
விட்டு விட்டேன்..
வாய்ப்புக்களை விட்டு விட்டேன்..

கைக்கு எட்டியது
வாய்கேட்டவில்லை என
அங்கலாய்ப்போர் பலர்..
ஆனால் நான்..
வாய்க்கெட்டி
வயிற்றுக்கு எட்டிய பின்,
வாந்தி எடுத்து விட்டேன்..
வாய்ப்புக்களை..

ஆற்றல் இல்லையே என்று
ஆற்றாமையில் அலறுவோர் பலர்..
நான் ஆற்றல்களை
ஆற்றுக்குள் போடவில்லை..
ஆழத்துக்கு சென்று
புதைத்து முத்திரையிட்டு வந்தேன்..

வினாப் பத்திரத்தில்
சித்திரம் கீறுகின்றேன்..
அல்லாஹ்வின் துணையும்
அடிக்கடி நான் எனக்குச் சொல்லும்
அசட்டு ஆருதல்களுமே
என் வாழ்கையை
இன்னும்
இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது...!!!
-இனியவள் இன்ஷிராஹ்-

1 கருத்து:

  1. Dear இனியவள் இன்ஷிராஹ்

    Asattu Nampikaiel Valkaiye
    vaiththirupathai vida,
    Vairaakkiyathudadan Vala valuuvoodum
    kavithye varaiungal athu ungalukum engalukkum
    palanaha Amium

    Nanri
    un Nanpan
    Sirajun Hilmikar

    பதிலளிநீக்கு