வியாழன், ஆகஸ்ட் 25, 2011

கனவுகளை சுமக்கும் அவள்....

அவள்...
வறுமையின் வயிற்றில்
தரித்தவள்..

அவளின் ஆசைகள்
நிச்சயமான ஆசைகள் அல்ல..
நிராசைகள் என்று
நிச்சயிக்கப்பட்ட ஆசைகள்...

அவள் விழிகளின்
ஓரம் கசியும் கண்ணீர்த்துளி -
ஓரங்கட்டப்பட்ட அவள்
எண்ணங்களின் எதிரொலி...

ஒவ்வொரு நாளும்
காலாவதியான ஒரு
கனவுடன் கண் விழிக்கிறாள்...

கனவுகளில் கூட
கருப்பு வெள்ளை தான்..
தினமும் அவள்
கனவுகள் சுமக்கிறாள் தான்..
அனால் கனவுகளுக்கு தான்
அவளை சுமக்க பிடிக்கவில்லை..

அடிக்கடி நடக்கும்
அவள் தோழிகளின்
ஆடம்பரக் கலந்துரையாடல்களில்
அவள் மௌனியாகிறாள்...

அவளின் வற்றிப் போன
வாழ்க்கைப் பாதையில்
வசந்தத்தின் சுவடுகள் - எப்போதும்
கானல் நீர் தான்...

-இன்ஷிராஹ் இக்பால்-

2 கருத்துகள்:

  1. un kavithay nayathil
    layithu ponathu en munnaan
    panjamillay unakku
    elayhalin nanjaahiya kanavuhalay
    nenjeluthudan koora
    innum innum kaniyatum
    un punay kavithayhal

    ippadiku
    un nanpan vinjaani

    பதிலளிநீக்கு
  2. Thanks Nazique.. Is it our Vinjaani Nazique..??

    பதிலளிநீக்கு