செவ்வாய், செப்டம்பர் 25, 2012

எனது குரல் கேட்கவில்லையா..???


எனது குரல் கேட்கவில்லையா..???
என்னைச் சுற்றியுள்ள
சனம் சொல்கிறது
நீ இல்லை என்று - ஆனால்
என் மனம் சொல்கிறது
நீ இன்னும் இருக்கிறாய் என்று..

என் மனசின் குரல்
உனக்கு கேட்கவில்லையா.?
என் அழுகுரல்
உன்னை அழைக்கவில்லையா..?
ஆனால் உன் குரல் எனக்கு கேட்கிறது..
உனது பேச்சு
உனது சிரிப்பு
உனது பாடல்
உனது குரல்
எனக்கு கேட்கிறது..
நிச்சயமாய் நீ தான்- அனால்
அது நிஜமில்லையா..?
நினைவா அது..?

நாட்கள் நகரத் தான் செய்கின்றன
நினைவுகள் மட்டும் நகராமல்
நிரந்தரமாய் உன்னையே சுற்றுகின்றன..

கண்களை மூடினால்
கனவு வந்து கலாய்க்கிறது என்னை
கனவில் நீ..
என்னுடன் கதைக்கின்றாய்
சிரிக்கின்றாய்
முறைக்கின்றாய்...!
கண்விழித்து தேடுகின்றேன்..
கண்ணீரால் நனைந்த தலையணையையும்
என்னைக் கட்டிக் கொண்ட
தனிமையையும் தான்
கண்டு கொள்கிறேன் நான்..

வாயை மூடி அழுகின்றேன்
அந்தக் குரல் உனக்கு கேட்கவில்லையா
கேட்டிருக்காது
கேட்டிருக்காது..
கேட்கப் போவதில்லை..
உன்னைப் பொறுத்த வரையில்
நான் ஒரு ஊமை..
என்னைப் பொறுத்தவரை
நீ ஒரு செவிடு..
ஏனென்றால்
எனது குரல் உனக்கு கேட்பதில்லை..
நீ நினைக்கிறாய்
நான் பேசுவதில்லை என்று..

இப்போது கூட எனது குரல்
கேட்கவில்லையா..??

1 கருத்து: